Monday, January 7, 2008

சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து அதிமுக பொதுக்குழு தீர்மானம்


அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காகவும் குறுகிய நோக்கத்துடன் செயல்படுவதால் தான் நாட்டில் பல நல்ல திட்டங்கள் செயல் படுத்த முடியாமல் போய் விடுகின்றது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் தமிழரல்லாத "ஜெ"வினால் தமிழ் தொண்டரடி பொடிகளின் உதவியுடன் தமிழ்நாட்டுக்கு செய்த பல துரோகங்களின் வரிசையில் இன்னொன்று. எதிர்க்க்ட்சிகள் என்றால் திட்டங்களை "எதிர்க்கும்" கட்சிகள் என்று நமது அரசியல் கட்சிகள் பொருள் கொண்டுவிட்டதில் வியப்பேதும் இல்லை. அவர் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் இருந்தால் தான் நமக்கெல்லாம் வியப்பாக இருந்திருக்கும்.

இங்கே இப்படியிருக்க, சீனாவிலே பீஜிங்கிற்கும் திபெத் தலைநகர் லாசாவிற்கும் இடையே ரயில் போக்குவரத்தை துவக்கி இருக்கிறார்கள் சீனர்கள், விந்தை என்னவென்றால் திபெத் 16,000 அடி உயரத்தில் இருக்கின்றது. அந்த உயரத்தை அடைய அவர்கள் 240 மைல்gaL பனிப்பாறைகளுனூடே (Permafrost) ரயில் பாதை அமைத்து இருக்கிறார்கள். இது சீனர்களின் அறிவியல் வளர்ச்சியை காண்பிக்கின்றது.

சீனர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு இன்னொரு சான்றாக அவர்களின் Three Gorges Dam திட்டம் இருக்கின்றது. இந்த பிரம்மாண்டமான அணை "யாங்சே" நதியில் கட்டப்பட்டுள்ளது. இதனின் அகலம் 1 1/2 மைல்களும், உயரம் 600 அடி, நீள்ம் 400 மைல்கள். ஆண்டுதோறும், இந்நதியின் வெள்ளப்பெருக்ககால் பலத்த சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு வ்ந்ததால் 1919'ல் அணை கட்டுவதற்கான ஆய்வு முதலில் மேற்கொள்ளபட்டது. பின் மீண்டும் 1950;ல் மற்றொரு ஆய்வு மேற்கொள்ளபட்டது. தற்போது இதன் மூலம் உற்பத்தியாகும் (நீர்) மின்சாரம் 18 அனுமின் உலைகளின் உற்பத்தி திற்னுக்கு இனையானது. இத்திட்டம் நவீன சீனாவின் திட்டமிடல் மற்றும் அமலாக்கம் , அறிவியல் ம்ற்றும் தொழிற் வளர்ச்சிக்கான ஒரு சான்றாக இருக்கின்றது.

ஆனால் , நம் இந்தியர்களுக்கு இவ்வளவு பெரிய திட்டங்களை ஒருங்கினைந்து திட்டமிட்டு அமல்படுத்தும் திறன் உள்ளதா எனபது ஐயமே! நமது அறிவு முதிர்ச்சி மதம் ம்ற்றும் ராமரை பற்றி பேசும் அள்விலேயே வளர்ந்து இருக்கின்றது. இதற்கு நமது உச்ச நீதிமன்ற்மும் துனணபுரிந்ததில் வியப்பேதும் இல்லை.

பி.கு: இதனன சில வாரங்களுக்கு முன்பு "இட்லிவடை" யில் பின்னூட்டமாக எழுதியிருந்தேன்.

பொது சுகாதாரம் பற்றிய ஒரு சிந்தனை


பொதுவாக நம்மூர் பேருந்து நிலையங்கள் அருகில் கட்டணக் கழிப்பிடங்கள் இருந்தாலும் நமது மக்கள் பெரிதாக பயண்படுத்துவதில்லை. மாறாக அதற்கு அருகில் வெட்ட வெளிப்பறத்தை தான் அதிகம் பயண்படுத்துகிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் அது "கட்டணக்" கழிப்பிடங்களாக இருப்பது ஒன்று. அவசரத்திற்காக போகும் மக்களிடம் சில்லரை இருப்பதில்லை. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வெளிப்புறங்களை பயண்படுத்த நினைப்பதுவும் தான். மேலும் பொது கட்டணக் கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. தேவையான தண்ணீர் வசதியும் இருப்பதில்லை. இதற்கு நிதி பற்றாக்குறையும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் குறைவும் ம்ற்றொரு காரணம் ஆகும். பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், நாள்தோறும் பெரு நகரங்களுக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு செயல்படாது (செயலற்று) இருப்பதுவே காரணம் ஆகும்.

இதற்கான ஒரு தீர்வாக நீர் மற்றும் நிதி ஆதாரங்களை பெருக்குவதும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிப்பது, "கட்டண"க் கழிப்பிடங்களை "கட்டணமில்லா" சுகாதாரமான கழிப்பிடங்களாக அதை மாற்றுவதும் என்பது என் கருத்து.

நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான ஒரு வழிமுறையாக மழை நீரை சேமிப்பதும், ஏரி மற்றும் குளங்களை ஆழ/அகலப் படுத்துவதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் தான். மேலும் பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை சாலையோரங்கள் மற்றும் தெருவோரங்களிலும், ஏரி மற்றும் குளக்கரைகளிலும் நடுவதுவேமாகும். மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மரங்கள் வெட்டப்படுவது குற்றமென கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதைப் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடங்களில் விளக்கமான விளம்பரங்களை வெளியிடுவது, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் ஒரு பாடமாகவும் அது மாணவர்களை முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்துவதிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இதனை செய்ய ஊக்கப்படுவதும், இதை வலியுறுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு (இப்பொழுது உள்ளது போல அல்ல) கேளிக்கை வரியை ரத்து செய்வதும் இருக்கின்ற பல வழிகளில் சில.

நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு - "கட்டண"க் கழிப்பிடங்களை "கட்டணமில்லா" சுகாதாரமான கழிப்பிடங்களாக மாற்றுவதற்கும் அதனை சரியாக பராமரிப்பதற்கும், கழிப்பிடங்கள் இல்லாத பொது இடங்களில் புதுக் கழிப்பிடங்கள் அமைப்பதற்கும் லாபகரமாக இயங்கும் தனியார் நிறுவனங்களையும் மற்றும் தொழிற்சாலைகளையும், முக்கியமாக பொது/தனியார்த்துறை வங்கிகளை அதன் கிளைகளின் மூலமாக அக்கிளைகளிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பொது கழிப்பிடங்களின் பராமரிப்புச் செலவை ஏற்கச்செய்வதின் மூலம் இதனை நிறைவேற்றிட இயலும். அவ்வாறு செய்ய முன்வரும் நிறுவனங்களை அரசு சலுகைகள் அளித்து ஊக்கப்படுவது மற்றவர்களையும் அதனை செய்ய முன்வரத் தூண்டும்.

இதனை செயல்படுத்த மான்புமிகுக்களும் அவர்களின் "செயலற்ற" செயலாளர்களும் முன்வருவார்களா?

Wednesday, January 2, 2008

ரஜினியின் தமிழ்த் தொண்டு..............

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரின் உதவியாளரின் சமீபத்திய அறிவிப்பு எதிர்காலத்திலும் உண்மையாகவே இருக்குமானால் (நம்புவோமாக) அது அவர் தமிழ்ச் சமூகத்திற்கு செய்த (ஒரே) ஒரு நல்ல தொண்டாகும். அவரை இதுவரை ஒரு தெளிவற்ற சிந்தனை கொண்ட மனிதராகவே அவருடைய பேச்சும்/செயல்பாடுகளும் இருந்து வந்திருக்கிற்து. சோ மா(தி)ரி ஆட்களின் பேச்சை கேட்டு திசை தவறி போகாமல் ஒரு தெளிவான முடிவை எடுத்து இருக்கிறார். அவரை அரசியலுக்கு இழுப்பதற்கு சோவும் ஆதிக்கவாத ஊடகங்களும் எவ்வளவோ முயன்று பார்த்தன. ஆனால் மனிதர் வளைந்து கொடுக்கவில்லை. இதற்காக அவருக்கு தமிழர்களாகிய நாம் நன்றி உடைத்தாய் இருக்கிறோம்.

இல்லையேல் திரைத் துறையில் நடித்து (?) முடித்து ஓய்வு எடுத்துக் கொண்டவர்களும், வாய்ப்புக் குறைந்து போன கூத்தாடிகளும், கட் அவுட் வைத்தவனும் போஸ்டர் ஒட்டியவனும் தான் கொள்கை பரப்புச் செயளாளர்களாகவும் அமைச்சர்களாகவும் (ஆட்சிக்கு வந்திருந்தால்) ஆகியிருப்பார்கள். பின்னனியில் இந்த ஆதிக்க சாதியும் அவரை வெற்று புகழ்ச்சி செய்து அவரின் மேல் நன்றாக சவாரி செய்திருக்கும்.

தமிழர்கள் தப்பித்தார்கள்...................